Identity /தமிழ் கவிதை/ QueenQuotes

இந்த உலகத்தில் நம் பிறப்பு பிரபலமாகாமல் இருக்கலாம். ஏனென்றால் அது நம்மை அறியாமல் நிகழ்ந்தது. பிறப்பு என்ற ஒன்று உண்டென்றால் இறப்பும் நிச்சயம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் இறப்பு எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். வாழும்போது ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும். அதற்காக வாழும் போது நமக்கென்று ஒரு அடையாளத்தை கடின உழைப்பால் உருவாக்க வேண்டும். வாழும்போது நாம் உருவாக்கும் அடையாளம், நாம் இறக்கும் போதும் நம்முடன் வரும்.