புகைப்பட மோகம்/ தமிழ் கவிதை/ Addiction
இன்றைய நாகரீக உலகில் புகைப்பட மோகம் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. அத்தகைய மோகத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கும் அநேக வாலிபர்கள் உள்ளனர். தங்கள் உயிரை இழப்பது மட்டும் அல்ல மற்றவர் உயிரை காப்பாற்ற கூட முன்வர விடாமல் புகைப்பட மோகம் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. செய்திகளை தெரிவிப்பது நல்லது. ஆனால் விபத்து நேர்ந்து மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரை காப்பாற்றாமல் புகைப்படம் எடுப்பது விபரீதம். இன்றைய இளைய சமூகம் இந்த உண்மையை உணர்ந்து உதவி செய்தால் பல உயிர்களின் நெஞ்சங்களில் இளைய சமூகத்தினரின் பெயர நிலை நிற்கும்.
Comments
Post a Comment