Posts

Showing posts from March, 2022

பெருமிதம் / தமிழ் கவிதை/ நீதி

Image
பேனாவின் முனை தான் மரணிக்கும் நேரத்தில் கூட பெருமிதம் கொள்கிறது.  காரணம் தவறு செய்த ஒருவருக்கு சரியான தீர்ப்பு வழங்கி விட்டது என்பதால். ஒருவருக்கு மரண தண்டனை கொடுத்த பிறகு நீதிபதி தன் கையிலுள்ள பேனா முனையை உடைப்பார்.  இதன் அர்த்தம் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்தியா  ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடு.  அவர்கள் ஆட்சி செய்த போது கடைபிடித்த இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது நம் நாட்டில். நீதிபதி தன் கையிலுள்ள பேனாவால் மரண தண்டனை என்ற தீர்ப்பை எழுதிய பிறகு இனி இந்த பேனா மற்றொருவரின் உயிரையும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக பேனாவின் முனையை உடைக்கின்றனர்.  சட்டப்புத்தகத்தில் மரண தண்டனைக்கு பிறகு பேனாவின் முனையை உடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

தகுதி/ தமிழ் கவிதை/ motivational quotes

Image
      நண்பர்களே! பல நேரங்களில் நாம் விரும்பிய ஒன்று நமக்கு கிடைக்காமல் போகலாம். அதற்காக தவறான முடிவுகள் எடுத்து விடக்கூடாது. சில கால காத்திருப்பிற்கு பிறகு சில மனிதர்களுக்கு அவர்கள் விரும்பிய ஒன்று கிடைக்கும். சில மனிதர்கள் காத்திருந்தாலும் அவர்கள் விரும்பிய ஒன்று கிடைக்காது. அவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே!.... நீ விரும்பிய ஒன்று உனக்கு கிடைக்கவில்லை என்றால் உன்னை அடைய அதற்கு தகுதி இல்லை என்பது மட்டுமே.    மனம் உடைந்து எதிர்மறை சிந்தனை உன்னில் உருவாகாமல் இருக்க வேண்டும்.  நேர்மறை சிந்தனை நிறைந்து எதையும் ஏற்றுக்கொண்டு வாழும் வாழ்க்கையை மன நிறைவுடன் வாழ வேண்டும்.

அடிமைத்தனம்/ அன்பு/ தமிழ் கவிதை

Image
அடிமைத்தனத்தின் ஆபத்து:      ‌அடிமைத்தனம் என்பது சரியான ஒன்றா?? இல்லை . இருப்பினும் நாம் பல வேளைகளில் அடிமைப் படுகின்றோம். மொபைல், டி.வி, அன்பு போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.  அன்பில் ஏற்படுகின்ற அடிமைத்தனம் என்பது மிகப் பெரிதான ஆபத்தை ஏற்படுத்தும். தான் அன்பு செலுத்தும் நபர் வேறு நபரிடம் பேசும் போது வரும் கோபம், ஒருவர் நம்மை விட்டு பிரிந்து சென்று மற்றொரு நபரிடம் இணக்கமாகும் போது வரும் பழிவாங்கும் தன்மை போன்றவை அன்பின் அடிமைத்தனத்திற்கு அறிகுறி.  பல வேளைகளில் நாம் பெற்றோரை விட எதிர்பால் அன்பில் ஈர்க்கப்பட்டு அடிமைப் படுகின்றோம்.  இந்த அடிமைத்தனம் மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். காரணம், எதிர்ப்பால் அன்பு நம்மை விட்டு பிரியும் நேரம் பல ஆண்டுகள் வளர்த்த பெற்றோரை மறந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ள கூட தயங்காது.  அன்பு செலுத்துவது தவறில்லை ஆனால் , அடிமைப்படாமல் நாம் இருக்கிறோமா என்பதில் கவனம் தேவை.  அன்பில் அடிமைப்பட்ட யாரேனும் இருந்தால் ஒருமுறை உங்கள் பெற்றோரை நினைத்து பாருங்கள்.  பின்பு தவறான முடிவு எடுப்பதை கைவிட்டுவி...

தத்துவம்/ சந்தோஷம்/ தமிழ் கவிதை

Image
     நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் பெரிய பெரிய சந்தோஷத்தை எதிர்பார்த்து நம்முடைய நிம்மதியை இழந்து விடுவோம்.  நிம்மதியை இழப்பது மட்டும் அல்ல வாழ்க்கையில் நம்மை சந்தோஷப்படுத்துகின்ற சின்ன சின்ன விஷயங்களை உதாசீனப் படுத்தி விடுவோம்.  அப்படி பெரிய சந்தோஷத்தை எதிர்பார்க்காமல் வாழ்க்கை நமக்கு தருகின்ற சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷப்பட்டால் நாம் பெரிய சந்தோஷத்தை எதிர்பார்த்து நிம்மதியை இழக்க மாட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

புகைப்பட மோகம்/ தமிழ் கவிதை/ Addiction

Image
      இன்றைய நாகரீக உலகில் புகைப்பட மோகம் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது.  அத்தகைய மோகத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கும் அநேக வாலிபர்கள் உள்ளனர். தங்கள் உயிரை இழப்பது மட்டும் அல்ல மற்றவர் உயிரை காப்பாற்ற கூட முன்வர விடாமல் புகைப்பட மோகம் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. செய்திகளை தெரிவிப்பது நல்லது. ஆனால் விபத்து நேர்ந்து மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரை காப்பாற்றாமல்  புகைப்படம் எடுப்பது விபரீதம். இன்றைய இளைய சமூகம் இந்த உண்மையை உணர்ந்து உதவி செய்தால் பல உயிர்களின் நெஞ்சங்களில் இளைய சமூகத்தினரின் பெயர நிலை நிற்கும்.

சுயநலம்/ அரசியல்/ ஆட்சிமுறை/ தமிழ் கவிதை

Image
      மக்களின் குறைகளை போக்க மக்களாட்சி உருவாக்கப்பட்டது. பண்டைய கால மக்களாட்சி முறையில் அரசியல் தலைவர்கள் சுய நலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுநல வாழ்க்கை மேற்கொண்டனர்.  காமராஜர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் நாட்டு மக்களுக்காக உழைத்தார். ஆனால் இன்றைய ஆட்சி முறையில் பெரும்பாலும் சுயநலம் நிறைந்து காணப்படுகின்றது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பல உதவிகள் சென்றடையாமல் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிகிறது. அரசியல் அதிகாரிகள் மக்களுக்காக நிதி ஒதுக்கினாலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் எந்த உதவிகளும் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மை. அரசு அதிகாரிகள் தனிப்பட்ட குழு அமைத்து கண்காணித்தால் ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமில்லாமல் இருக்கும் 💯

இலக்கு / motivational quotes

Image
இலக்கு ;                 இன்று நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று அதிக விருப்பம் கொள்கிறோம். அதற்கான முயற்சி நம்மிடம் உள்ளதா??  நாம் சாதனையாளராக மாற இலக்கு என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். இலக்கு என்ற ஒன்று உறுதியாகவும் அதற்கான முயற்சி தொடர்கதையாகவும் நம் வாழ்வில் இருக்கும் போது வெற்றி என்ற ஒன்று நிச்சயம் கிடைக்கும் 🤩. எனவே, இலக்கை நோக்கி ஓடும் பயணத்தில் வரும் தடைக்கல்லை உன் கண் முன்னே நிறுத்தாமல் சோர்வின்றி ஓடி உன் இலக்கை அடைந்து விடு.

Motivational Quotes / உன்னால் முடியும்

Image
     ஒரு செயலை நீ செய்ய தொடங்கும் முன்பே  உன்னால் முடியாது என்று உன் மனம் எண்ணினால் , அந்த செயலை நீ செய்து முடிப்பாய் என்று உன் மனம் ஒருபோதும் எண்ணாது. எனவே, முடியாது என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு என்னால் முடியும் என்று எண்ணி எண்ணிய காரியத்தில் வெற்றி பெறு!!!

மனம் விரும்பிய பொருள்

Image
    நம் மனம் விரும்பாத ஆயிரம் விலையுயர்ந்த பொருள்கள் கிடைத்தாலும் வராத திருப்தி நம் மனம் விரும்பிய ஒரு சிறிய பொருளில் கிடைத்து விடுகிறது ‌‌.